டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

காதலித்து திருமணம் செய்து கொண்டு அழகாக குடும்பம் நடத்தும் நட்சத்திர ஜோடிகளில் சூர்யா - ஜோதிகா தம்பதியினர் குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கின்றனர். திருமணம் செய்து கொண்ட பிறகு குடும்பம் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி ஆகியவற்றிற்காக படங்களில் நடிப்பதை தவிர்த்த ஜோதிகா, குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பிறகு தற்போது செலெக்ட்டிவான நல்ல கதையைம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை முன்னிட்டு மும்பைக்கு குடி பெயர்ந்து உள்ளனர் சூர்யா - ஜோதிகா தம்பதியினர்.
பெரும்பாலும் நட்சத்திரங்கள் தங்களது குழந்தைகளை வெளியுலகுக்கு அவ்வளவாக காட்டுவதை விரும்புவதில்லை. சூர்யாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோரின் புகைப்படங்கள் எப்போதாவது ஒருமுறை தான் மீடியாக்களில் வெளியாகி வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற சூர்யா - ஜோதிகா இருவரும் தியா, தேவ் இருவரையும் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். அது மட்டுமல்ல புகைப்படக்காரர்கள் தங்களை புகைப்படம் எடுப்பதற்கு அழகாக பொறுமையாக போஸும் கொடுத்துள்ளனர். இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.




