Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொர்க்கத்திற்கு சென்று ஸ்ரீதேவியை கைது செய்வார்களா? - ராம்கோபால் வர்மா காட்டம்

20 டிச, 2024 - 12:07 IST
எழுத்தின் அளவு:
Will-they-go-to-heaven-and-arrest-Sridevi---Ram-Gopal-Varma

கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக ஐதராபாத்தில் உள்ள சந்தியா என்கிற திரையரங்கிற்கு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்த ரேவதி என்கிற பெண் அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சமயத்தில் அந்த திரையரங்கில் அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்ததால் அவரைப் பார்க்க கூட்டம் முண்டியடித்த போது இந்த தள்ளுமுள்ளு ஏற்பட்டு ரேவதி உயிரிழக்க காரணமாக அமைந்தது. அது மட்டுமல்ல ரேவதியின் மகன் ஸ்ரீ தேஜ் காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மருத்துவர்கள் அவன் மூளைச்சாவு அடைந்துள்ளதாக கூறியுள்ளார்கள்.

இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் எனக் கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன்பின் கைதும் செய்யப்பட்டு ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டதற்கு பல இடங்களில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. குறிப்பாக அல்லு அர்ஜுன் மற்றும் அவரது படங்கள் குறித்து விமர்சிக்கக்கூடிய இயக்குனர் ராம்கோபால் வர்மா கூட அல்லு அர்ஜுனின் இந்த கைது ஏற்கக் கூடியது அல்ல இதற்கு எதிராக திரையுலகம் ஒன்று திரள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஷனாஷனம் என்கிற படத்தை இயக்கினேன். அந்த படத்தில் நடித்த ஸ்ரீதேவியை பார்ப்பதற்கு படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் லட்சக்கணக்கான கூட்டம் திரண்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மூன்று ரசிகர்கள் உயிரிழந்தனர். அப்படி என்றால் போலீஸார் சொர்க்கத்திற்கு சென்று இப்போது ஸ்ரீதேவியை கைது செய்யப் போகிறார்களா என்ன? சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் ரொம்பவே பிரசித்தி பெற்றவர்களாக இருப்பதற்கு எதிராக செய்யப்படும் குற்றம் தான் இந்த கைது நடவடிக்கை” என்று கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வணங்கான் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் வரலட்சுமியின் அம்மாவணங்கான் படத்தின் மூலம் நடிகையாக ... அருண் விஜய்யின் அன்புக்கு தலைவணங்கிய சிவகார்த்திகேயன் அருண் விஜய்யின் அன்புக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
26 டிச, 2024 - 05:12 Report Abuse
Senthoora முடியும் நம்ம ஆள் சொன்னாரே தேர்தல் நேரத்தில் , நான் கடவுள் என்று, அந்த கடவுளால் முடியாதா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in