ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக ஐதராபாத்தில் உள்ள சந்தியா என்கிற திரையரங்கிற்கு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்த ரேவதி என்கிற பெண் அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சமயத்தில் அந்த திரையரங்கில் அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்ததால் அவரைப் பார்க்க கூட்டம் முண்டியடித்த போது இந்த தள்ளுமுள்ளு ஏற்பட்டு ரேவதி உயிரிழக்க காரணமாக அமைந்தது. அது மட்டுமல்ல ரேவதியின் மகன் ஸ்ரீ தேஜ் காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மருத்துவர்கள் அவன் மூளைச்சாவு அடைந்துள்ளதாக கூறியுள்ளார்கள்.
இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் எனக் கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன்பின் கைதும் செய்யப்பட்டு ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டதற்கு பல இடங்களில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. குறிப்பாக அல்லு அர்ஜுன் மற்றும் அவரது படங்கள் குறித்து விமர்சிக்கக்கூடிய இயக்குனர் ராம்கோபால் வர்மா கூட அல்லு அர்ஜுனின் இந்த கைது ஏற்கக் கூடியது அல்ல இதற்கு எதிராக திரையுலகம் ஒன்று திரள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஷனாஷனம் என்கிற படத்தை இயக்கினேன். அந்த படத்தில் நடித்த ஸ்ரீதேவியை பார்ப்பதற்கு படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் லட்சக்கணக்கான கூட்டம் திரண்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மூன்று ரசிகர்கள் உயிரிழந்தனர். அப்படி என்றால் போலீஸார் சொர்க்கத்திற்கு சென்று இப்போது ஸ்ரீதேவியை கைது செய்யப் போகிறார்களா என்ன? சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் ரொம்பவே பிரசித்தி பெற்றவர்களாக இருப்பதற்கு எதிராக செய்யப்படும் குற்றம் தான் இந்த கைது நடவடிக்கை” என்று கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா.