எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் தனித்துவமானவர் சந்திரபாபு, எல்லோரும் எம்ஜிஆரை பார்த்து பயந்த காலத்தில் அவரையே எதிர்த்து நின்றவர், இந்திய ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து கொண்டவர், திருமணமானவுடன் தனது மனைவி இன்னொருவரை காதலிக்கிறார் என்பதை தெரிந்தவுடன் அவருடன் சேர்த்து வைத்தவர், அந்த காலத்திலேயே மாடியில் கார் பார்க்கிங் வைத்து வீடு கட்டியவர், ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் கேட்டவர் இப்படி பல விஷயங்கள் அவரது வாழ்க்கையில் இருக்கிறது.
அவரது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க பலரும் முயற்சித்தனர். அது இப்போதுதான் கைகூடி வந்திருக்கிறது. துல்கர் சல்மான் நடித்த 'ஹே சினாமிகா' படம் மற்றும் 'ராமன் தேடிய சீதை', 'சாருலதா', அலோன்' உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்காக சந்திரபாபுவின் சகோதரர் ஜவஹரிடமிருந்து உரிய அனுமதியை பெற்றுள்ளார்களாம். எழுத்தாளரும், இயக்குநருமான கே.ராஜேஷ்வர் எழுதிய 'தி லெஜண்ட் ஆப் சந்திரபாபு' என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் தயாராகிறது. திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகனும், மதன் கார்க்கி கூடுதல் திரைக்கதை, வசனங்கள் மற்றும் பாடல் எழுதுகின்றனர். சந்திரபாபுவாக தனுஷ் நடிப்பதாக சொல்கிறார்கள்.