டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'புஷ்பா 2'. இப்படம் முதல் நாளிலேயே வசூல் சாதனை படைத்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளுமே இப்படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருந்தது.
இப்படம் 10 நாட்களில் 1292 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இன்று 1300 கோடியை தாண்டியது. இப்படம் தெலுங்கில் மட்டும் 210 கோடிக்கு வியாபாரம் நடந்தது. கடந்த பத்து நாட்களில் அந்த வசூல் 270 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இப்போதுதான் 'பிரேக் ஈவன்' நிலையை அடைந்துள்ளது. இதற்கு மேல் வசூலாகும் தொகைதான் அங்கு லாபத்தைக் கொடுக்கும்.
அதே சமயம் மற்ற மாநிலங்களில் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக வசூலித்துள்ளதால் அங்கெல்லாம் மிகப் பெரிய லாபத்தை ஏற்கெனவே கொடுக்கத் துவங்கிவிட்டது. குறிப்பாக ஹிந்தியில் இப்படத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
'புஷ்பா 2' படம் எப்படியும் 1500 கோடியைக் கடந்துவிடும். இருந்தாலும் 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் வசூலை முறியடிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.




