மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
புஷ்பா 2 படத்தின் முதல்காட்சி திரையிடப்பட்ட போது ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இது சம்பந்தமாக நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் புஷ்பா-2 படத்தில் நாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், ‛‛இப்போது நடப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. புஷ்பா-2 படத்தின் முதல் காட்சியின்போது ஒரு பெண் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. அது மிகவும் வருத்தமானதும் கூட. ஆனபோதிலும் அல்லு அர்ஜுன் என்ற ஒருவர் மீது எல்லா பழியையும் சுமத்துவது வருத்தமளிக்கிறது'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து தெலுங்கு நடிகர் நானி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛சினிமா துறையினர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசு அதிகாரிகளும் ஊடகங்களும் காட்டும் ஆர்வத்தை சாதாரண மக்கள் மீதும் காட்ட வேண்டும். நடந்து முடிந்தது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லோருமே தவறு செய்பவர்கள்தான். ஆனால் இதற்கு எல்லாம் ஒரே ஒரு மனிதர் மட்டும் பொறுப்பேற்க முடியாது'' என்று பதிவிட்டுள்ளார்.