ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புஷ்பா 2 படத்தின் முதல்காட்சி திரையிடப்பட்ட போது ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இது சம்பந்தமாக நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் புஷ்பா-2 படத்தில் நாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், ‛‛இப்போது நடப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. புஷ்பா-2 படத்தின் முதல் காட்சியின்போது ஒரு பெண் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. அது மிகவும் வருத்தமானதும் கூட. ஆனபோதிலும் அல்லு அர்ஜுன் என்ற ஒருவர் மீது எல்லா பழியையும் சுமத்துவது வருத்தமளிக்கிறது'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து தெலுங்கு நடிகர் நானி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛சினிமா துறையினர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசு அதிகாரிகளும் ஊடகங்களும் காட்டும் ஆர்வத்தை சாதாரண மக்கள் மீதும் காட்ட வேண்டும். நடந்து முடிந்தது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லோருமே தவறு செய்பவர்கள்தான். ஆனால் இதற்கு எல்லாம் ஒரே ஒரு மனிதர் மட்டும் பொறுப்பேற்க முடியாது'' என்று பதிவிட்டுள்ளார்.