32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் இந்திய அளவில் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள பல ஐமேக்ஸ் தியேட்டர்களையும் அப்படமே ஆக்கிரமித்துள்ளது. அப்படத்திற்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதால் தியேட்டர்காரர்கள் தியேட்டர்களை தாராளமாக வழங்கினார்கள். அதை நிரூபிக்கும் விதத்திலும் முதல் நாள் வசூலாக உலக அளவில் 294 கோடிகளையும் அப்படம் வசூலித்துள்ளது.
இதனிடையே, இணையதளம் ஒன்று 'இன்டர்ஸ்டெல்லர்' படத்தின் ஐமேக்ஸ் ரிரிலீஸ் 'புஷ்பா 2' படம் காரணமாக வெளியாகவில்லை என்று செய்தி வெளியிட்டிருந்தது. அதன் சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை ஜான்வி கபூர் 'புஷ்பா 2' படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளார். ஜான்வியின் பதிவுக்கு சினிமா ரசிகர்கள் பலரும் லைக் செய்துள்ளனர்.
“புஷ்பா 2 கூட சினிமாதான். மேற்கத்திய விஷயத்தில் ஆர்வம் காட்டுவதிலும், நம் சொந்த நாட்டிலிருந்து வரும் விஷயங்களைக் குறைத்து தகுதி நீக்கம் செய்வதிலும் நாம் ஏன் வெறித்தனமாக இருக்கிறோம். மற்றநாடுகளை பாராட்டுவது மற்றும் பெரிதாகப் பார்ப்பது, அதுவே நம் சினிமாவால் ஈர்க்கப்பட்டால் நாமே வெட்கப்படுவது வருத்தமே,” எனக் குறிப்பிட்டுள்ளார்.