டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கங்குவா படத்திற்கு பிறகு கார்த்தி சுப்பராஜ் இயக்கி உள்ள தனது 44வது படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா, அதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் 'ஆறு' படத்தில் பிறகு மீண்டும் திரிஷா அவருக்கு ஜோடியாகி இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஏற்கனவே, எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் போன்ற படங்களில் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்த சூர்யா, மீண்டும் இந்த 45வது படத்திலும் அதே வேடத்தில் நடித்து வருகிறார். இதே வேடத்தில் அவர் நடித்த ஜெய் பீம் படம் அவருக்கு பெரிய வெற்றியாக அமைந்ததால் அந்த செண்டிமெண்ட் இந்த நாற்பத்தி ஐந்தாவது படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.




