கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படம் 'புறநானூறு'. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியானது.
இதனிடையே, இப்படத்தின் அறிவிப்பு முன்னோட்டத்திற்கான படப்பிடிப்பு ஒன்று நடந்த போது சுதாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே சண்டை நடந்து அதனால் படப்பிடிப்பு ரத்தானதாகவும் கடந்த இரண்டு நாட்களாக வதந்தி ஒன்று பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், அதற்குப் பதிலளிக்கும் விதமாக அப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், 'பருத்திவீரன்' படத்தில் கார்த்தி ஒருவரை அடிக்கும் சிறு வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அது 'புறநானூறு' பற்றிய வதந்திகளைப் பரப்பியவர்களுக்கான பதிலடி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.