இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தில் இரண்டாம் பாகம் ‛புஷ்பா-2 ; தி ரூல்ஸ்' என்கிற பெயரில் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகம் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீப நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சென்னை, கொச்சி, மும்பை என மாறி மாறி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ‛புஷ்பா' படத்திற்காக ராஷ்மிகா, ரூ.2 கோடி சம்பளம் வாங்கியதாகவும், 2ம் பாகத்திற்கு ரூ.10 கோடி வாங்கியதாகவும் தகவல் பரவியது. இது குறித்து ஹைதராபாத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, ‛‛எனது சம்பளம் பற்றி வரும் தகவல்களில் உண்மையில்லை. அது வதந்திதான். படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இயக்குநர் சுகுமார் இருப்பதால், புரமோஷன்களில் அவர் கலந்துகொள்ளவில்லை. 'புஷ்பா' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தில் எனக்கு விருது கிடைக்குமா? என்று கேட்கிறீர்கள். கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.