இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியான படம் 'அமரன்'. அப்படத்துடன் வெளிவந்த 'பிரதர், பிளடி பெக்கர்' ஆகிய படங்கள் ஒரே வாரத்தில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டன. ஆனால், 'அமரன்' படம் நான்கு வாரங்களைக் கடந்தும் நான்-ஸ்டாப் ஆக ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு சூர்யா நடித்து வெளிவந்த 'கங்குவா' படம் கூட ஒரு சில தியேட்டர்களில் ஓரிரு காட்சிகளில் மட்டும்தான் கொண்டிருக்கிறது.
'அமரன்' படம் இந்த நான்கு வாரங்களில் சுமார் 320 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் அதிக லாபத்தைக் கொடுத்த படங்களில் இப்படம்தான் முதலில் இருக்கும் என்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் டப்பிங் ஆகி அங்கும் இன்னும் பல தியேட்டர்களில் ஓடி வருகிறது. மொத்தமாக 90 கோடி வரை லாபத்தைக் கொடுத்துள்ளதாகத் தகவல்.