சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஒரே இரவில் எழுதிய கதைதான் 'ஓர் இரவு' என்ற பெயரில் திரைப்படம் ஆனது. அதேபோல கே.பாக்யராஜ் ஒரே இரவில் எழுதிய கதைதான் 'இன்று போய் நாளை வா'. ஒரே பெண்ணை காதலிக்கும் 3 நண்பர்களின் கதை. அந்த பெண்ணின் மனதை வெல்வது யார்? எப்படி என்பதுதான் திரைக்கதை. மூவரில் ஒருவர், பணக்காரர், கல்லூரி மாணவர். இன்னொருவர் ஏழ்மையானவர், வேலைக்குச் செல்பவர். அடுத்தவர், நடுத்தர வர்க்கம், வேலைக்குச் செல்லாமல் பொழுதைக் கழிப்பவர். 1980களின் இளைஞர்களின் காதல் கலாட்டாவை யதார்த்தமாக பிரதிபலித்த படம். காமெடி, சென்டிமென்ட் கலந்த காதல் கதை. அதோடு ஹிந்தி திணிப்பு, வர்க முரண்பாடுகளையும் சொன்ன படம்.
இந்த படத்தில் கே.பாக்யராஜோடு அவரது நிஜமான நண்பர்கள் பழனிச்சாமி, ராம்லி நடித்தார்கள், ராதிகாதான் ஹீரோயின். ராதிகாவின் அப்பா வி.எம்.ஜான். அம்மா காந்திமதி. தாத்தா கல்லாபெட்டி சிங்காரம். ரவுடியாக சூர்யகாந்த். உடன் கைத்தடியாக செந்தில். இந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டே முழு கதையும் சொல்வார் கே.பாக்யராஜ். இன்றைக்கு பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் படம்.