என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஒரே இரவில் எழுதிய கதைதான் 'ஓர் இரவு' என்ற பெயரில் திரைப்படம் ஆனது. அதேபோல கே.பாக்யராஜ் ஒரே இரவில் எழுதிய கதைதான் 'இன்று போய் நாளை வா'. ஒரே பெண்ணை காதலிக்கும் 3 நண்பர்களின் கதை. அந்த பெண்ணின் மனதை வெல்வது யார்? எப்படி என்பதுதான் திரைக்கதை. மூவரில் ஒருவர், பணக்காரர், கல்லூரி மாணவர். இன்னொருவர் ஏழ்மையானவர், வேலைக்குச் செல்பவர். அடுத்தவர், நடுத்தர வர்க்கம், வேலைக்குச் செல்லாமல் பொழுதைக் கழிப்பவர். 1980களின் இளைஞர்களின் காதல் கலாட்டாவை யதார்த்தமாக பிரதிபலித்த படம். காமெடி, சென்டிமென்ட் கலந்த காதல் கதை. அதோடு ஹிந்தி திணிப்பு, வர்க முரண்பாடுகளையும் சொன்ன படம்.
இந்த படத்தில் கே.பாக்யராஜோடு அவரது நிஜமான நண்பர்கள் பழனிச்சாமி, ராம்லி நடித்தார்கள், ராதிகாதான் ஹீரோயின். ராதிகாவின் அப்பா வி.எம்.ஜான். அம்மா காந்திமதி. தாத்தா கல்லாபெட்டி சிங்காரம். ரவுடியாக சூர்யகாந்த். உடன் கைத்தடியாக செந்தில். இந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டே முழு கதையும் சொல்வார் கே.பாக்யராஜ். இன்றைக்கு பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் படம்.