6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி |
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஜெயம் ரவி. தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தியைக் காதலித்து 2009ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிக்கை மூலம் தெரிவித்தார் ஜெயம் ரவி. தொடர்ந்து விவாகரத்து கோரி வழக்கும் தொடர்ந்தார். அதேசமயம் ஜெயம் ரவியின் இந்த முடிவு தன்னிச்சையானது என அறிக்கை வெளியிட்டார் ஆர்த்தி.
இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே இருவரையும் சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் இன்று(நவ., 27) நீதிமன்றத்தில் ஆஜராகினர். சமரச தீர்வு மையத்தில் சுமார் ஒருமணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் வழக்கை நீதிபதி டிச., 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.