நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியிருந்தார் ரிஷப் ஷெட்டி. இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தான், அடுத்து இயக்கி நடிக்கப் போவதாக கூறியிருந்தார் ரிஷப் ஷெட்டி. படத்திற்கு 'காந்தாரா ; சாப்டர் 1' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25ம் தேதி (நேற்று முதல்) இதன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. ஆனால் படப்பிடிப்பு துவங்குவதற்கு ஓரிரு நாட்கள் முன்பாக படக்குழுவினர் பயணம் செய்த பேருந்து படப்பிடிப்பு தளத்திற்கு அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் விபத்திற்குள்ளானது. நல்லபடியாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதனால் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டு விட்டது போல ஒரு செய்தி கிளம்பி விட்டது.
ஆனால் குறித்த நேரத்தில் நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் அக்டோபர்-2ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி எந்த தடங்கலும் இல்லாமல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.