மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
நவரச கலைக்கூடம் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‛நெஞ்சு பொறுக்குதில்லையே'. இந்த படத்தில் அன்பே வா, பாவம் கணேசன், சில்லுனு ஒரு காதல் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த அரவிந்த் ரியோ மற்றும் காளிதாஸ் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள்.
நாயகிகளாக 'கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்த புவனேஸ்வரி ரமேஷ் பாபு மற்றும் சூரியவம்சம், என்றென்றும் புன்னகை, எங்க வீட்டு மீனாட்சி போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த நித்யாராஜ் இருவரும் அறிமுகமாகிறார்கள். மற்றும் ஜேஷன் கௌசி, சசிகுமார் உட்பட பலர் நடித்துள்ளார்கள். பாடல்களுக்கு எம்.எல்.சுதர்சன் இசை அமைக்கிறார், ஜெயகுமார் பின்னணி இசை அமைக்கிறார், அப்துல் கே.ரகுமான் ஒளிப்பதிவு செய்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருவர் என்ற புனைப் பெயரில் பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள். படம் பற்றி இயக்குனர்கள் கூறும்போது “வீட்டை விட்டு வெளியேறும் காதலர்கள் சந்திக்கும் பிரச்சனையை மையமாக வைத்து சமுகத்தில் நடக்கும் அவலங்களையும், இன்று இளைஞர்களின் மனநிலையையும் வெளிப்படுத்தும் ஒரு சமுக சிந்தனை உள்ள திரைப்படம் இது. படப்பிடிப்பு முழுவதும் கேரளா மாநிலத்தின் புனலூர், உப்புகுளி உள்ளிட்ட இயற்கை எழில் நிறைந்த மலைப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது” என்றனர்.