டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வெளிவந்த படங்களை ஆங்கில அரசு தணிக்கை செய்தது. படத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான வசனமோ, காட்சிகளோ இருந்தால் அந்த படத்தை தடை செய்து விடுவார்கள். இந்த மாதிரியான நேரத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தையும், அவர்கள் இந்தியர்களுக்கு செய்யும் கொடுமைகள் பற்றியும் வெளிவந்த படம்தான் 'மாத்ருபூமி'.
அப்போது வங்கத்தில் நடத்தப்பட்டு வந்த 'சந்திரகுப்தா' என்ற நாடகத்தைதான் திரைப்படமாக இயக்கினார் எச்.எம்.ரெட்டி. இந்த நாடகம் அலெக்சாண்டர் படையெடுப்பையும் அவரை எதிர்த்த சந்திரகுப்ப மவுரியரையும் பற்றிய கதை. அந்த கதையை அப்படியே படமாக்கி அலெக்சாண்டர் படையெடுப்பை, ஆங்கிலேயர்கள் ஆக்கிரமிப்பாகவும், அவர் செய்த அடக்குமுறைகளை ஆங்கிலேயர்களின் அடக்குமுறையாகவும், சந்திரகுப்த மவுரியரின் போராட்டத்தை சுதந்திர போராட்டமாகவும் உருவகப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது.
இதில் டி.எஸ்.சந்தானம், பி.யூ.சின்னப்பா, டி.வி.குமுதினி, காளி என்.ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் போர் காட்சிகள் செஞ்சிக்கோட்டை, கிருஷ்ணகிரி கோட்டையில் படமாக்கப்பட்டது. 2 ஆயிரம் பேர் நடித்தனர். இந்த படம் வெளியீட்டுக்கு தயாரானபோது தமிழகத்தில் ராஜாஜி முதல்வர் ஆனார். அவர் ஆட்சிக்கு வந்ததும் தணிக்கை விதிமுறைகளை தளர்த்தினார். இதனால் எந்த சிக்கலும் இல்லாமல் இந்த படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.




