ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை |

நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா இடையிலான மோதல் விவகாரம் நேற்று முதல் பரபரப்பாக உள்ளது. இது குறித்து யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. நயன்தாராவின் டாகுமென்டரியும் ஒரு வியாபாரம், தனுஷ் கேட்ட அல்லது கொடுக்க மறுத்த காரணமும் ஒரு வியாபாரம் என்பதுதான் அனைவரும் புரிந்து கொண்டது.
இருந்தாலும், நயன்தாராவின் அறிக்கை நேற்று வெளிவந்தது முதல் எக்ஸ் தளத்தில் கடுமையான, அசிங்கமான சண்டை அரங்கேறி நடந்து வருகிறது. நயன்தாராவுக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் களமாட ரசிகர்கள் மிகவும் குறைவு. அதே சமயம் தனுஷுக்கு சமூக வலைதளங்களில் களமாட, ஆதரவு தெரிவிக்க ரசிகர்கள் மிக அதிகம்.
எக்ஸ் தளத்தில் நேற்று 'CharacterlessLadyNayanthara' என்ற ஹேஷ்டேக்குடன் தனுஷ் ரசிகர்கள் நயன்தாராவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்தனர். அதில் சில வரம்பு மீறி ஆபாசமான வார்த்தைகளுடன், அசிங்கமான கெட்ட வார்த்தைகளுடன் கூடிய சண்டையாகவும் இருந்தது.
இந்த விவகாரம் குறித்து தனுஷ் தரப்பிலிருந்து எந்தவிதமான பதில் அறிக்கையும் வரவில்லை. அதே சமயம் தனுஷ் ரசிகர்களின் எதிர்ச் செயல் அவர்களாக செய்ததா அல்லது செய்யச் சொல்லப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.




