தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகையான பார்வதி நாயர். சில மாதங்களுக்கு முன் விஜய் நடித்து வெளியான கோட் படத்தில் இவரும் நடித்திருந்தார். தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இவர் கூறுகையில், ‛‛தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகர்களுடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது எனக்கான அதிர்ஷ்டம் என்றே சொல்வேன். மகிழ்ச்சியாக இருக்க ஸ்டாராக இருக்க வேண்டியதில்லை. நடிகர்களுக்கு எல்லா விஷயங்களும் சாதகமாக இருக்காது. என்ன தான் திறமையானவராக இருந்தாலும் அதில் அதிர்ஷ்டமும் முக்கிய பங்கு வகிக்கும்'' என்றார்.




