ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன் பிறகு வெடி, வேட்டை என சில படங்களில் நடித்தவர், பின்னர் மும்பையை சேர்ந்த அக்ஷய் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் கூட சோசியல் மீடியாவில் அவ்வப்போது பரபரப்பான புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொண்டு வருகிறார் சமீரா ரெட்டி. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மாமியார் குறித்து மிகவும் சிலாகித்து பல தகவல்களை கூறியுள்ளார் சமீரா.
மாமியார் பற்றி அவர் கூறும்போது, “எங்களது காதலுக்கு திருமணத்திற்கு ரொம்பவே பக்கபலமாக இருந்தவர் எனது மாமியார். எங்களது திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்தே எங்களுடன் சினிமாவிற்கு வருவது, ஷாப்பிங் வருவது என எல்லாவற்றிலும் இணைந்து கொள்வார். அது மட்டுமல்ல திருமணத்திற்கு முன்பே அவரது வீட்டில் பல நாட்கள் நான் தங்கி இருக்கிறேன். அந்த அளவிற்கு பெருந்தன்மையான அவர், கொஞ்சம் மாடர்ன் கொஞ்சம் கலாச்சாரம் என கலந்த ஒரு கலவையான பெண்மணி” என்று கூறியுள்ளார்.




