300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
'கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர்' ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன். அவர் இயக்கிய கடைசி இரண்டு படங்களுக்காக, முதலில் இயக்கிய இரண்டு படங்களை விடவும், கை நிறைய சம்பளமாக வாங்கினார். அந்தப் பணத்தைத் திரும்பவும் சினிமாவிலேயே முதலீடு செய்தார்.
தனது உதவியாளரான சிவபாலன் முத்துக்குமாரை இயக்குனராக அறிமுகப்படுத்தி, தனது நண்பரான கவினை நாயகனாக்கி 'பிளடி பெக்கர்' படத்தைத் தயாரித்தார். படம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் நெல்சன். ஆனால், தீபாவளி போட்டியில் வெளிவந்த 'அமரன்' படத்துடன் போட்டி போட முடியாமல், படமும் மிகச் சுமாராக இருந்ததால் தோல்வியைத் தழுவியது.
நெல்சனை நம்பி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தன்னை நம்பி படத்தை வாங்கிய அவர்களுக்கு நஷ்டத் தொகை தந்து சரிக்கட்ட நெல்சன் முடிவெடுத்திருக்கிறாராம். ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே இப்படி நஷ்டத்தைத் திருப்பித் தந்திருக்கிறார்கள்.
தியேட்டர் வெளியீட்டில் படம் நஷ்டம் என்றாலும், சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை ஆகிய வருமானம் மூலம் தயாரிப்பாளரான நெல்சனுக்கு எந்த நஷ்டமும் இல்லையாம். தனது அடுத்த தயாரிப்பை மிகவும் கவனமுடன் செய்வாரா நெல்சன், அல்லது 'ஜெயிலர் 2' இயக்கும் வேலை போதும், என அந்தப் பக்கம் போய்விடுவாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.