நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சூர்யா, திஷா படானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிப்பில் நாளை(நவ., 14) வெளியாக உள்ள படம் 'கங்குவா'. இப்படத்தின் வெளியீட்டை எதிர்த்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டது. அதில் ரிலையன்ஸ் நிறுவனம் போட்ட வழக்கில் கடந்த வாரம் பணம் செலுத்தப்பட்டு வழக்கு முடிவுக்கு வந்தது.
அடுத்து சென்னை உயர்நீதிமன்ற சொத்தாட்சியர் தொடர்ந்த வழக்கில் இன்று நவம்பர் 13ம் தேதிக்குள் 20 கோடியை செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 'தங்கலான்' பட வெளியீட்டிற்கு முன்பாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் 'கங்குவா' வெளியீட்டிற்கு முன்பு ஒரு கோடியை செலுத்தியதால் படத்தை வெளியிட தடையில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11ம் தேதிக்குள் 3 கோடி செலுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளார்கள். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ஏற்கெனவே 10 கோடியே 35 லட்ச ரூபாயை டெபாசிட் செய்ததையும் நீதிபதிகளில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பியூயல் டெக்னாலஜிஸ் தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு வழங்க வேண்டிய அசல் தொகையில் மீதமுள்ள 1 கோடியே 60 லட்ச ரூபாயை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் செலுத்தியதால் அந்த வழக்கிலும் 'கங்குவா' பட வெளியீட்டிற்குத் தடையில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், வழக்குகளின் சிக்கல்களிலிருந்து விடுவிக்கப்பட்டதால் 'கங்குவா' படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகிறது.