மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக பேசியதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அதையடுத்து அவர் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டு கொண்டார். என்றாலும் கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரியின் இல்லத்துக்கு போலீசார் சென்றார்கள். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அதையடுத்து தாங்கள் கொண்டு சென்ற சம்மனை அவர் வீட்டு சுவரில் ஒட்டிவிட்டு காவல் துறையினர் திரும்பினார்.
இந்த நிலையில் இன்று நடிகை கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசியதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன். ஆனபோதும் அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நடைபெற உள்ளது.