புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக பேசியதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அதையடுத்து அவர் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டு கொண்டார். என்றாலும் கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரியின் இல்லத்துக்கு போலீசார் சென்றார்கள். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அதையடுத்து தாங்கள் கொண்டு சென்ற சம்மனை அவர் வீட்டு சுவரில் ஒட்டிவிட்டு காவல் துறையினர் திரும்பினார்.
இந்த நிலையில் இன்று நடிகை கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசியதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன். ஆனபோதும் அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நடைபெற உள்ளது.