'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா | பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் | எனது கேரக்டர் குறித்த பயம், பதற்றம் இருந்தது : ‛லவ் மேரேஜ்' சுஷ்மிதா பட் | கவுதமியிடம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் விசாரணை | அன்று ஹர்பஜன் சிங்... இன்று சுரேஷ் ரெய்னா : தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்புவாரா மட்டை வீரர்! |
சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ல் திரைக்கு வருகிறது. இதன் காரணமாக அவர் தீவிர புரமோஷனில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கி வரும் அன்ஸ்டாபபுல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சூர்யா. அப்போது சூர்யாவிடத்தில், உங்களுடைய முதல் க்ரஷ் யார் என்று பாலகிருஷ்ணா கேட்க அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் நழுவினார் சூர்யா. இதையடுத்து உங்களுடைய க்ரிஷ் யார் என்று தெரியாமல் விட மாட்டேன் என்று சொல்லி சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்திக்கு போன் செய்தார். அப்போது அவரிடத்தில் பாலகிருஷ்ணா, உங்கள் அண்ணன் சூர்யாவின் முதல் க்ரஷ் யார் என்று கேட்டால் சொல்ல மறுக்கிறார். அவருடைய முதல் க்ரஷ் யார் என்று நீங்கள் சொல்லுங்கள் என்று அவர் கேட்க, அதற்கு கார்த்தி, சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே நடிகையான கவுதமி தான் சூர்யாவின் முதல் க்ரஷ் என்று கூறினார். அதை கேட்ட சூர்யாவோ, நீ கார்த்தி இல்லடா கத்தி என்று தெலுங்கில் சத்தமாக சொல்ல, அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.