துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ல் திரைக்கு வருகிறது. இதன் காரணமாக அவர் தீவிர புரமோஷனில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கி வரும் அன்ஸ்டாபபுல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சூர்யா. அப்போது சூர்யாவிடத்தில், உங்களுடைய முதல் க்ரஷ் யார் என்று பாலகிருஷ்ணா கேட்க அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் நழுவினார் சூர்யா. இதையடுத்து உங்களுடைய க்ரிஷ் யார் என்று தெரியாமல் விட மாட்டேன் என்று சொல்லி சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்திக்கு போன் செய்தார். அப்போது அவரிடத்தில் பாலகிருஷ்ணா, உங்கள் அண்ணன் சூர்யாவின் முதல் க்ரஷ் யார் என்று கேட்டால் சொல்ல மறுக்கிறார். அவருடைய முதல் க்ரஷ் யார் என்று நீங்கள் சொல்லுங்கள் என்று அவர் கேட்க, அதற்கு கார்த்தி, சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே நடிகையான கவுதமி தான் சூர்யாவின் முதல் க்ரஷ் என்று கூறினார். அதை கேட்ட சூர்யாவோ, நீ கார்த்தி இல்லடா கத்தி என்று தெலுங்கில் சத்தமாக சொல்ல, அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.