இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகராக மட்டும் அல்லாது இயக்குனராகவும் தனது முத்திரையை பதித்து வருகிறார் தனுஷ். ப.பாண்டி, ராயன் படங்களுக்கு பிறகு தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதை தொடர்ந்து 'இட்லி கடை' என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி, தேனி பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்த படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே நடித்து வருகிறார்கள், ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் தனுஷ் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் படத்தின் நாயகன் அருண் விஜய் என்றும், அவர் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கவுரவ தோற்றத்தில் தனுஷ் நடிக்கிறார். இது தொடர்பான முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும் என்று தெரிகிறது.