இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
உலக செஸ் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். அவரது வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. ஆனால் அதற்கு விஸ்வநாதன் அனுமதி அளிக்காமல் இருந்தார்.
தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், பாலிவுட் எழுத்தாளர் சஞ்சய் திரிபாதியும் இணைந்து எழுதியுள்ள திரைக்கதைக்கு ஆனந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். மஹாவீர் ஜெயின், ஆஷிஷ் சிங் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த் கேரக்டரில் நடிக்க நடிகர் தேர்வு நடந்து வருகிறது. 52 வயதான தற்போதைய விஸ்வநாதன் ஆனந்த் தோற்றத்தில் மாதவன் நடிப்பார் என்று தெரிகிறது. தற்போது ஏ.எல்.விஜய் மாதவன், கங்கனா ரனவத் நடிக்கும் 'லைட்' என்ற படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாக்கி வருகிறார்.
மயிலாடுதுறையில் 1969 டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். 1988ல் இந்தியாவுக்கு முதல் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டத்தை வாங்கிக் கொடுத்தார். 5 முறை உலக சாம்பியன், 2 முறை உலகக்கோப்பை செஸ் சாம்பியன் உள்பட பல்வேறு சாதனைகள் படைத்திருக்கும் அவர் மூலமாகவே இந்தியாவில் செஸ் போட்டி பிரபலமானது.