விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அவருக்கும் தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் என கடந்த சில வருடங்களாகவே டோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள். மாலத்தீவிற்கு சுற்றுலா சென்ற போது கூட இருவரும் ஒன்றாகத்தான் சென்றார்கள். ஆனால், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைத் தனித்தனியாகப் பதிவிட்டார்கள் என்றும் பரபரப்பு எழுந்தது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கூர்க் தான் ராஷ்மிகாவுக்கு சொந்த ஊர். ஐதராபாத்திலும் ஒரு வீடு வைத்துள்ளார். இந்நிலையில் இந்த வருட தீபாவளியை ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் அவருடைய குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
தீபாவளியின் போது எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “தீபாவளி போட்டோஷுட் முடிந்தது. மகிழ்ச்சியான தீபாவளி,” என்று குறிப்பிட்டு புகைப்படம் எடுத்ததற்காக விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவிற்கு நன்றி தெரிவித்து, 'நன்றி ஆனந்ததததா..,” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது தீபாவளி புகைப்படங்களுக்கு மொத்தமாக 6 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன.
விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் எடுத்த புகைப்படங்கள்தான் அவை என்பது பார்க்கும் போதே தெரிகிறது என்பதுதான் ரசிகர்களின் கமென்ட்டாக உள்ளது.