என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அவருக்கும் தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் என கடந்த சில வருடங்களாகவே டோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள். மாலத்தீவிற்கு சுற்றுலா சென்ற போது கூட இருவரும் ஒன்றாகத்தான் சென்றார்கள். ஆனால், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைத் தனித்தனியாகப் பதிவிட்டார்கள் என்றும் பரபரப்பு எழுந்தது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கூர்க் தான் ராஷ்மிகாவுக்கு சொந்த ஊர். ஐதராபாத்திலும் ஒரு வீடு வைத்துள்ளார். இந்நிலையில் இந்த வருட தீபாவளியை ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் அவருடைய குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
தீபாவளியின் போது எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “தீபாவளி போட்டோஷுட் முடிந்தது. மகிழ்ச்சியான தீபாவளி,” என்று குறிப்பிட்டு புகைப்படம் எடுத்ததற்காக விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவிற்கு நன்றி தெரிவித்து, 'நன்றி ஆனந்ததததா..,” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது தீபாவளி புகைப்படங்களுக்கு மொத்தமாக 6 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன.
விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் எடுத்த புகைப்படங்கள்தான் அவை என்பது பார்க்கும் போதே தெரிகிறது என்பதுதான் ரசிகர்களின் கமென்ட்டாக உள்ளது.