சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அவருக்கும் தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் என கடந்த சில வருடங்களாகவே டோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள். மாலத்தீவிற்கு சுற்றுலா சென்ற போது கூட இருவரும் ஒன்றாகத்தான் சென்றார்கள். ஆனால், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைத் தனித்தனியாகப் பதிவிட்டார்கள் என்றும் பரபரப்பு எழுந்தது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கூர்க் தான் ராஷ்மிகாவுக்கு சொந்த ஊர். ஐதராபாத்திலும் ஒரு வீடு வைத்துள்ளார். இந்நிலையில் இந்த வருட தீபாவளியை ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் அவருடைய குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
தீபாவளியின் போது எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “தீபாவளி போட்டோஷுட் முடிந்தது. மகிழ்ச்சியான தீபாவளி,” என்று குறிப்பிட்டு புகைப்படம் எடுத்ததற்காக விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவிற்கு நன்றி தெரிவித்து, 'நன்றி ஆனந்ததததா..,” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது தீபாவளி புகைப்படங்களுக்கு மொத்தமாக 6 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன.
விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் எடுத்த புகைப்படங்கள்தான் அவை என்பது பார்க்கும் போதே தெரிகிறது என்பதுதான் ரசிகர்களின் கமென்ட்டாக உள்ளது.