மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 1ம் தேதி முதல் புதிய படங்களை தொடங்க தடை விதித்துள்ளது. படப்பிடிப்பு செலவுகள் அதிகரிப்பு, நடிகர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு செய்வதற்காக இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தயாரிப்பாளர் சங்கம் விளக்கமளித்தது.
இந்த அறிவிப்புக்கு ஆரம்பத்தில் இருந்தே தென்னிந்திய நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி வந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் படப்பிடிப்பு பணிகளை முடக்குவதாக அறிவிப்பு வெளியானது குழப்பத்தை விளைவிக்கிறது. இந்த தன்னிச்சையான முடிவினால் மிகப்பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப்போவது தமிழ்த் திரைத்துறை தொழிலாளிகள் மட்டுமல்ல, முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் அது பெரும் இழப்பையே ஏற்படுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த தீர்வுகாண முற்படும் வேளையில், வேலை நிறுத்தம் முட்டுக்கட்டையாகவே கருதப்படும்.
அத்தகைய செயல்பாட்டை தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒருபோதும் ஆதரிக்காது. அதேசமயம், தமிழ்த் திரைத்துறை தொழிலாளர்களின் நன்மைக்கான எந்த நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயலாற்ற தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதுமே முன்னிலை வகித்துள்ளது. இனியும் அந்த நிலைப்பாடு தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.