ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து திரையரங்குகளில் வெளிவந்த படம் 'நந்தன்'. நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிதளவில் வெற்றி படமாக அமையவில்லை.
சமீபத்தில் இப்படம் ஓடிடியில் வெளியான பிறகு நந்தன் படத்தை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டு படக்குழுவினரை பாராட்டினார்கள். பா.ஜ.,வைச் சேர்ந்த அண்ணாமலை, பா.ம.க.,வை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.
இந்த நிலையில் 'நந்தன்' படத்தைப் பார்த்துவிட்டு ரஜினியும் படக்குழுவினரைப் பாராட்டி இருக்கிறார். சசிகுமார் மற்றும் இரா.சரவணன் இருவரையும் தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக சசிகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதன்படி, “நந்தனது தைரியத்தையும் உழைப்பையும் பாராட்டியதோடு, படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து அகம் திறந்து வாழ்த்திய ரஜினிகாந்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி” என குறிப்பிட்டு தனது நன்றியை பகிர்ந்துள்ளார்.