ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. அவரது குழுவில் இடம் பெற்ற மைனர் நடனப் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நேற்று முன்தினம் சிறையிலிருந்து வெளிவந்த ஜானி அவருடைய வீட்டிற்குச் சென்றார்.
வீட்டிற்குள் அவர் நுழைந்ததையும், மகன், மகள் குடும்பத்தினரை சந்தித்ததையும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, “இந்த 37 நாட்களில் எங்களிடமிருந்து நிறைய பறிக்கப்பட்டது. எனது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளின் பிரார்த்தனைகள் இன்று இங்கு வரச் செய்தது. உண்மை பல சமயங்களில் மறைந்தாலும் அழியாது, அது ஒரு நாள் வெல்லும். என்னுடைய குடும்பம் சந்திக்கும் இந்த கடினமான தருணம் என் வாழ்நாளில் எப்போதும் என்னை துளைத்து கொண்டே இருக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'திருச்சிற்றம்பலம்' படத்தில் 'மேகம் கருக்காதா…' பாடலுக்காக தேசிய விருது ஜானிக்கு அறிவிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்டு விருதைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமீன் வாங்கினார் ஜானி. ஆனால், அவர் போக்சோவில் கைதானதால் அந்த விருதை தேர்வுக்குழுவினர் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.