பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

அனுராக் சிங் இயக்கத்தில் சன்னி தியோல், வருண் தவான், தில்ஜித் தோசன்ஜ், அஹான் ஷெட்டி, சோனம் பஜ்வா உள்ளிட்டோர் நடிப்பில் ஹிந்தியில் உருவாகி வரும் படம் ‛பார்டர் 2'. 1971ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்த போரில் பரம்வீர் சக்ரா விருது பெற்ற மறைந்த இந்திய ராணுவ கர்னல் ஹோஷியார் சிங் தஹியா முக்கிய பங்காற்றினார். இவரது வேடத்தில் வருண் தவான் நடித்துள்ளார்.
தற்போது பார்டர் 2 படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசரில் வருண் தவானின் நடிப்பை பார்த்து ஹோஷியார் சிங் தஹியா குடும்பத்தினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கர்னல் சுஷில் குமார் தஹியா, தனது குடும்பத்தினருடன் இணைந்து தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், நாங்கள் இப்போதுதான் 'பார்டர் 2' டீசரைப் பார்த்தோம். வருண் தவான் நிச்சயமாக அந்தக் கதாபாத்திரத்திற்கு நீதி செய்துள்ளார். டீசர் மிகவும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. எங்கள் பாரம்பரியம் இத்தகைய உணர்வுடனும் நேர்மையுடனும் சொல்லப்படுவதைக் காண்பது எனக்கும் என் குடும்பத்திற்கும் உண்மையிலேயே ஒரு சிறப்பு வாய்ந்த தருணம். படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளோம். உங்களுக்கும் முழு படக்குழுவினருக்கும் படத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
'பார்டர் 2' திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 23ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.