நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, இது நம்ம ஆளு, கதகளி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். அடுத்ததாக விஜய் சேதுபதி, நித்யா மேனனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் படப்பிடிப்பு இப்போது திருச்செந்தூரில் நடந்து வருகிறது. கடற்கரை பகுதிகளில் விஜய் சேதுபதி உட்பட பலர் நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்து தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட சில கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.