டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சுமார் 1500 பாடலுக்கு மேல் பின்னணி பாடியவர் சுசித்ரா. இவர் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதால் அவர் மீது காவல்துறையிலும் புகார்கள் அளிக்கப்பட்டது. அதோடு தனது முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக் மீதும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டார். அதையடுத்து அவர் சுசித்ரா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இப்படியான நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டுள்ளார் சுசித்ரா. அதில் தான் மும்பையில் நிரந்தரமாக செட்டிலாக போவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு அங்கு சென்று குழந்தைகளுக்கான மாத இதழ் ஒன்றில் பணியாற்ற போகிறேன். இது என்னுடைய நீண்ட நாள் கனவு என்றும் தெரிவித்திருக்கும் பாடகி சுசித்ரா, இனிமேல் சோசியல் மீடியாவில் எந்த வீடியோவும் வெளியிட மாட்டேன் என்றும் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.




