எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'ஆர்ஆர்ஆர்' படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் தனி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் 'தேவரா'. இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டார்கள். பத்து நாட்களில் இப்படம் 466 கோடி வசூலித்தது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் 'தேவரா' படத்தின் வரவேற்பு குறித்தும், வசூல் குறித்தும் என்டிஆர் பேசியுள்ளார். படம் மிகப் பெரிய வசூலையும், வெற்றியையும் பெறாதது குறித்து தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய ரசிகர்கள் ஒரு படத்தை அதிகமாகக் கிண்டலடிக்கிறார்கள், அவர்கள் படத்தை பொழுதுபோக்காகப் பார்ப்பதில்லை. அதை அதிகமாக ஆராய்ந்து, விமர்சன ரீதியாகப் பார்க்கிறார்கள். இதுதான் பல படங்கள் குறைவான வரவேற்பைப் பெறக் காரணமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.