இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு |

கொரோனா தாக்கத்திற்குப் பிறகு எந்தத் துறை பாதிக்கப்பட்டதோ இல்லையோ, சினிமாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த 2020ம் ஆண்டில் ஒடிடி தளங்களுக்கு திடீரென ஒரு வரவேற்பு கிடைத்தது. கொரோனா பாதிப்பால் தியேட்டர்களை மூடியதால், பொழுதுபோக்கிற்காக ஓடிடி பக்கம் போனார்கள் மக்கள். அதனால், பல படங்கள் ஓடிடி தளத்தில் நேரடியாகவே வெளியானது.
தியேட்டர்களில் வெளியான பின்னும் அப்படங்களுக்கு ஓடிடி தளங்களில் நல்ல விலையும் கிடைத்தது. ஆனால், தற்போது ஓடிடி நிறுவனங்கள் பல படங்களை வாங்க முன்வருவதில்லை என தயாரிப்பாளர்கள் நொந்து போய் உள்ளார்களாம். முன்னணி நடிகர்களின் படங்கள், மற்றும் தியேட்டர்களில் வசூலைக் குவிக்கும் படங்களை மட்டுமே அவர்கள் வாங்குகிறார்களாம். மற்ற படங்களை அவர்கள் சீண்டுவதேயில்லையாம்.
ஓடிடி தளங்களின் நிலைமை இப்படியிருக்க, சாட்டிலைட் டிவிக்களில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கான விலையும் மிகவும் குறைந்துவிட்டதாம். ஓடிடியில் வெளியான படங்களை டிவியில் ஒளிபரப்பினால் மக்கள் பார்ப்பதில்லை, அதனால், விளம்பரங்களும் கிடைப்பதில்லை என டிவிக்காரர்கள் புலம்புகிறார்களாம்.
ஒரு காலத்தில் சாட்டிலைட் உரிமை மூலம் நல்ல வருவாய் கிடைத்த தயாரிப்பாளர்களுக்கு, கடந்த சில வருடங்கள் மூலம் ஓடிடி தளங்கள் மூலமும் நல்ல வருவாய் கிடைத்தது. தற்போது அவையிரண்டுமே குறைந்து வருவதால் தியேட்டர் வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறார்களாம்.
தியேட்டர்களிலும் சிறிய படங்களுக்கு வரவேற்பு இல்லை என்று சொல்லி அதற்கும் காட்சிகளைத் தர மறுக்கிறார்களாம். தமிழ் சினிமாவின் இப்படியான சூழல் மாறுமா அல்லது இப்படியே நீடிக்குமா என்ற கவலையில் பல தமிழ் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்று வேதனையுடன் சொல்கிறார்கள்.