ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
நடிகை கோமதி ப்ரியா ஓவியா தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது 'சிறகடிக்க ஆசை' தொடரின் மூலம் புகழ் உச்சத்தை தொட்டுள்ள அவர் அந்த தொடரை விட்டு விலகியதாக பரவி வரும் செய்தியை பார்த்து ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், உண்மையில் அவர் தமிழில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து விலகவில்லை. மலையாள மொழியில் சிறகடிக்க ஆசை தொடர் செம்பனீர் பூவே என்கிற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. அதிலும் கோமதி ப்ரியா தான் ஹீரோயினாக நடித்து வந்தார். இந்நிலையில், அவர் செம்பனீர் பூவே தொடரிலிருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் விலகுவதாக கூறியுள்ளார். அந்த செய்தி தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.