ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள சினிமாவில் உதவி இயக்குனராக இருந்த விஜயன் சென்னை வந்தது நடிப்பதற்காக அல்ல, படம் இயக்குவதற்காக. இங்கு வந்து தமிழ் கற்றுக்கொண்டு திரைக்கதை, வசனகர்த்தாவாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். முதலில் 'சங்குபுஷ்பம்' என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதினார். அந்த படத்தில் ஒரு கேரக்டரில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அதில் அவர் நடிக்க முடியாமல் போகவே ஏமாற்றத்தை சந்தித்தார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்த நிவாஸ் தான் ஒளிப்பதிவு செய்த 'கிழக்கே போகும் ரெயில்' படத்தில் பாரதிராஜாவின் உதவியாளராக விஜயனை சேர்த்து விட்டார். விஜயனின் தனித்துவமான குரல், உடல்மொழி இவற்றை கணித்த பாரதிராஜா அந்த படத்தில் 'பட்டாளத்தான்' கேரக்டரில் நடிக்க வைத்தார்.
இப்படி நடிகரான விஜயன் அதன் பிறகு உதிரிப்பூக்கள், பசி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, நாயகன், பாலைவன ரோஜாக்கள், ரமணா, '7/ஜி ரெயின்போ காலனி' உள்பட ஏராளமான படங்களில், பல்வேறு மொழிகளில் நடித்தார்.
இயக்குனர் கனவுடன் சென்னை வந்து நடிகரான விஜயன் தனது ஆசைக்காக 1991ம் ஆண்டு 'புதிய ஸ்வரங்கள்' என்ற படத்தை இயக்கினார். இதில் வில்லன் கேரக்டரில் நடித்த தேவன் நாயகனாகவும், அவரது ஜோடியாக உத்ராவும் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார். ஆனால் இந்த படம் பாதியிலேயே நின்று போனது. விஜயனின் இயக்குனர் கனவும் கலைந்து போனது.