மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மலையாள சினிமாவில் உதவி இயக்குனராக இருந்த விஜயன் சென்னை வந்தது நடிப்பதற்காக அல்ல, படம் இயக்குவதற்காக. இங்கு வந்து தமிழ் கற்றுக்கொண்டு திரைக்கதை, வசனகர்த்தாவாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். முதலில் 'சங்குபுஷ்பம்' என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதினார். அந்த படத்தில் ஒரு கேரக்டரில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அதில் அவர் நடிக்க முடியாமல் போகவே ஏமாற்றத்தை சந்தித்தார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்த நிவாஸ் தான் ஒளிப்பதிவு செய்த 'கிழக்கே போகும் ரெயில்' படத்தில் பாரதிராஜாவின் உதவியாளராக விஜயனை சேர்த்து விட்டார். விஜயனின் தனித்துவமான குரல், உடல்மொழி இவற்றை கணித்த பாரதிராஜா அந்த படத்தில் 'பட்டாளத்தான்' கேரக்டரில் நடிக்க வைத்தார்.
இப்படி நடிகரான விஜயன் அதன் பிறகு உதிரிப்பூக்கள், பசி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, நாயகன், பாலைவன ரோஜாக்கள், ரமணா, '7/ஜி ரெயின்போ காலனி' உள்பட ஏராளமான படங்களில், பல்வேறு மொழிகளில் நடித்தார்.
இயக்குனர் கனவுடன் சென்னை வந்து நடிகரான விஜயன் தனது ஆசைக்காக 1991ம் ஆண்டு 'புதிய ஸ்வரங்கள்' என்ற படத்தை இயக்கினார். இதில் வில்லன் கேரக்டரில் நடித்த தேவன் நாயகனாகவும், அவரது ஜோடியாக உத்ராவும் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார். ஆனால் இந்த படம் பாதியிலேயே நின்று போனது. விஜயனின் இயக்குனர் கனவும் கலைந்து போனது.