ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
மகாபாரதத்தில் வரும் மிக முக்கியமான கதாபாத்திரம் பீஷ்மர். சினிமா கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே 'பீஷ்மர்' என்ற பெயரில் இந்திய மொழிகள் அனைத்திலும் நாடகமாக நடத்தப்பட்டது. சினிமா வந்த பிறகு மவுன படங்களாக 'பீஷ்மர்' கதை படமானது. முதல் மவுன படம் 1921ம் ஆண்டு அப்போதிருந்த பிரபல இயக்குனர் ஆர்.பிரகாஷ் தயாரித்து இயக்கினார். அதன் பிறகும் இரண்டு மவுன படங்கள் உருவானது.
முதன் முறையாக பீஷ்மர் பேசியது தமிழ் படத்தில்தான். 1936ம் ஆண்டில் தமிழில் உருவான படம் 'பீஷ்மரின் பிரதிக்னா' (பீஷ்மரின் சபதம்). இந்த படத்தை பி.ஒய்.அட்லேகர் என்பவர் இயக்கினார். எம்.எஸ்.தாமோதர ராவ், சிவானந்தம், எம்.மீனாட்சிசுந்தரம், கே.ஆர்.காந்திமதி பாய், டி.எஸ்.ஜெயா, லட்சுமிநாராயண பாகவதர், 'தாடி' ஆர்.வி.கே. முதலியார், என்.சண்முகம், டி.பி.மானோஜி ராவ், பி.எஸ்.சிவபாக்யம், ஜெயலட்சுமி,கே.ஆர். லட்சுமி, சி.கே.செல்வாம்பாள், 'பேபி' எம்.ஆர்.மங்கலம் உள்ளிட்ட பலர் நடித்தனர். சேலம் பிலிம் கம்பெனி தயாரித்தது. பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். 23 பாடல்கள் படத்தில் இடம்பெற்றிருந்தது. 'பீஷ்மர் முதன் முறையாக தமிழில் பேசும் படம்' என்றே படத்திற்கு விளம்பரமும் செய்யப்பட்டது.