ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் வேட்டையன். ரஜினியுடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. மேலும், அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் ரஜினி என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக நடித்திருக்கிறார் .
இந்த நேரத்தில் தற்போது வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு ஒன்று கசிந்துள்ளது. அது என்னவென்றால், குற்றவாளிகளை என்கவுண்டர் செய்யும் ரஜினி கொலை குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை என்கவுண்டர் செய்கிறார். ஆனால் அதன் பிறகுதான் அந்த நபர் குற்றவாளி அல்ல. சில முக்கிய புள்ளிகள் அவரை குற்றவாளி ஆக்கி இருக்கிறார்கள் என்ற உண்மை ரஜினிக்கு தெரியவருகிறது. இதனால் கொதித்தெழும் ரஜினி, அந்த நபர் மீது வீண்பழி சுமத்தி தன்னை தவறுதலாக என்கவுண்டர் செய்ய வைத்த புள்ளிகளுக்கு எதிராக களமிறங்கி, அந்த நபரின் குடும்பத்திற்கு நீதி வாங்கி தருவதே இந்த வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு என்பது தெரியவந்துள்ளது.