'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
சாண்டோ சின்னப்பா தேவர் அப்போது பெரிய தயாரிப்பாளர், அவரது சகோதரர் எம்.ஏ.திருமுகம் பெரிய இயக்குனர். இவர்கள் இருவருமே எம்ஜிஆரை வைத்துதான் படம் எடுப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் இவர்களை அழைத்து எம்ஜிஆர் படம் எடுக்கச் சொல்வார். மறுபேச்சு இல்லாமல் இவர்கள் எடுப்பார்கள். எம்ஜிஆரை வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய திருமுகம், நடிகர் சிவாஜி வைத்து இயக்கிய ஒரே படம் என்றால் அது ‛தர்மராஜா' தான்.
1980ல் வெளியான இந்த படத்தில் சிவாஜி ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், வில்லனாக கே.பாலாஜியும் மற்றும் மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா, புஷ்பலதா உள்ளிட்ட பலர் நடித்தனர். கோழையாக இருப்பவன் திடீர் வீரனாகிற கதை தான். சிவாஜி அந்த ஊரில் உள்ள கோவிலை பராமரிப்பவர். பெரிய மனிதர் போர்வையில் அந்த ஊருக்கும் வரும் கே பாலாஜி கோவிலில் உள்ள சாமி சிலையை திருடிவிட்டு சிவாஜியின் தங்கையையும் கெடுத்து விட்டு சென்று விடுவார். அப்பாவியான சிவாஜி, பக்கா ஹீரோவாகி, வெளிநாடெல்லாம் சென்று எப்படி பாலாஜியை பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
வெளிநாடு எல்லாம் சென்று படமாக்கினார்கள். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் சிவாஜி, திருமுகம் இணைந்து படம் பண்ணவில்லை.