என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சாண்டோ சின்னப்பா தேவர் அப்போது பெரிய தயாரிப்பாளர், அவரது சகோதரர் எம்.ஏ.திருமுகம் பெரிய இயக்குனர். இவர்கள் இருவருமே எம்ஜிஆரை வைத்துதான் படம் எடுப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் இவர்களை அழைத்து எம்ஜிஆர் படம் எடுக்கச் சொல்வார். மறுபேச்சு இல்லாமல் இவர்கள் எடுப்பார்கள். எம்ஜிஆரை வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய திருமுகம், நடிகர் சிவாஜி வைத்து இயக்கிய ஒரே படம் என்றால் அது ‛தர்மராஜா' தான்.
1980ல் வெளியான இந்த படத்தில் சிவாஜி ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், வில்லனாக கே.பாலாஜியும் மற்றும் மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா, புஷ்பலதா உள்ளிட்ட பலர் நடித்தனர். கோழையாக இருப்பவன் திடீர் வீரனாகிற கதை தான். சிவாஜி அந்த ஊரில் உள்ள கோவிலை பராமரிப்பவர். பெரிய மனிதர் போர்வையில் அந்த ஊருக்கும் வரும் கே பாலாஜி கோவிலில் உள்ள சாமி சிலையை திருடிவிட்டு சிவாஜியின் தங்கையையும் கெடுத்து விட்டு சென்று விடுவார். அப்பாவியான சிவாஜி, பக்கா ஹீரோவாகி, வெளிநாடெல்லாம் சென்று எப்படி பாலாஜியை பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
வெளிநாடு எல்லாம் சென்று படமாக்கினார்கள். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் சிவாஜி, திருமுகம் இணைந்து படம் பண்ணவில்லை.