வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் |
நடிகர் தனுஷ் பன்முகத் திறமை கொண்ட நபர். குபேரா படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இயக்குனராக பா.பாண்டி, ராயன் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களும் வெற்றி பெற்றன. தற்போது இளைஞர்களை வைத்து ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இதையடுத்து தனுஷ் உடனடியாக புதிய படம் ஒன்றை இயக்கி, நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் ராஜ்கிரண், நித்யா மேனன் ஆகியோர் தனுஷ் உடன் இணைந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு 'இட்லி கடை ' என தலைப்பு வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.