இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை மஞ்சு வாரியர், அதையடுத்து அஜித்துடன் துணிவு படத்தில் நடித்தார். தற்போது ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து மிஸ்டர் எக்ஸ் என்று படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், வேட்டையன் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கூறியிருக்கிறார்.
அதில், இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறேன். என்னுடைய கேரக்டரின் பெயர் தாரா. ரஜினியின் மனைவி வேடம் என்றாலும் இந்த வேடத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் உள்ளன. அதனால் என்னுடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் . ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியதும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் வேட்டையன் படத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் நான் நடித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மஞ்சு வாரியர்.
போலீஸ் வேடத்தில் ரஜினி நடித்திருக்கும் இந்த படம் தமிழகத்தில் நடைபெற்ற சில என்கவுண்டர் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் ரஜினி - மஞ்சுவாரியர் ஆடி, பாடிய மனசிலாயோ என்ற பாடல் வெளியானது. இப்படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.