நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்துள்ளார்.
எடிட்டர் மோகனின் இளைய மகனாக ‛ஜெயம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரவி. பின்னாளில் ஜெயம் ரவியாக மாறினார். தொடர்ந்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்திலும், மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து இன்று முன்னணி நடிகராக வலம் வருகிறார். கடந்த 2009ல் தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
15 ஆண்டுகள் இவரது திருமண வாழ்க்கை நன்றாக சென்றது. சில மாதங்களாக இவர்கள் பிரிவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் இருவரும் அதைப்பற்றி மவுனம் காத்து வந்தனர். இவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் பேசி வந்த நிலையில் அது உடன்படாததால் இப்போது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛வாழ்க்கை என்பது பல அத்தியாயங்களை கொண்ட ஒரு பயணம். மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்கு பின் ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சாந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இது எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டுகிறேன். எனது முன்னுரிமை எப்போதும் நடிப்பு மூலம் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நான் என்றும் எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இசையமைப்பாளர்கள் இமான், ஜிவி பிரகாஷ், நடிகர் தனுஷ் ஆகியோர் தங்களது மனைவியை பிரிவதாக அறிவித்தனர். இப்போது ஜெயம் ரவியும் தனது மனைவியை பிரிந்துள்ளார்.