ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

கோலிவுட்டில் பிரபலங்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது அடிக்கடி நடக்கும். ஆனால், சிறிது காலத்தில் அவர்களின் பிரிவு செய்தியை மக்கள் மறந்துவிடுவார்கள் அல்லது அது வழக்கமான ஒன்றாகிவிடும். ஒருவர் பற்றி மற்றவர் குறை சொல்வது அரிது. தனுஷ், ஐஸ்வர்யா பிரிந்தார்கள், விஷ்ணுவிஷால், அவர் மனைவி ரஜினியை பிரிந்தார், ஜிவி பிரகாஷ் - சைந்தவியை பிரிந்தார். ஆனால், அவர்கள் தங்கள் பார்ட்னர் பற்றி மீடியாவில் பேசியது இல்லை, சண்டை போடவில்லை.
ஆனால், ரவி மோகன், ஆர்த்தி விஷயத்தில் சில வாரங்களாக இரண்டு பேரும் மாறி, மாறி சண்டை போட்டு அறிக்கை விட்டனர். ஒரு கட்டத்தில் கோர்ட் தலையிட அவர்கள் அறிக்கை போரை நிறுத்த வேண்டிய கட்டாயம். அடுத்து இந்த விவகாரத்தில் பேசப்பட்ட பாடகி கெனிஷாவும் சில அறிக்கை விட்டார். நேற்று தங்கள் மீது தவறாக பேசும் பாடகி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்த்தி அப்பா போலீசில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் எப்போது முடிவுக்கு வரும். இவர்களுக்குள் என்னதான் பிரச்னை? சட்டப்படி சில விவகாரங்கள் நடக்க, இவர்கள் மீடியா முன்பு சண்டைபோடுவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.