டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் நாளை(செப்., 5) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில், வெளிநாடுகளில் முன்னதாகவே காட்சிகள் நடைபெறுகின்றன. அதிகாலை சிறப்புக் காட்சிகளும் வெளிமாநிலங்களில் நடக்க உள்ளன.
தமிழகத்தில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்குவதை கடந்த வருடம் முதல் நிறுத்திவிட்டார்கள். தற்போது காலை 9 மணிக்கு மட்டுமே சிறப்புக் காட்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தால் அதற்கான அனுமதி வழங்கப்படும்.
'தி கோட்' படத்திற்கு அப்படி அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், இதுவரையிலும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது தகவலாக உள்ளது. இன்று மதியத்திற்கு அனுமதி வழங்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள். அப்படி அனுமதி கிடைக்கவில்லை என்றாலும் காலை 10 மணிக்கு மேல்தான் காட்சிகள் ஆரம்பமாக வாய்ப்புள்ளது.
'தி கோட்' படத்தின் நீளம் 3 மணி நேரம். பல தியேட்டர்களில் காலை 10 மணிக்கு இப்போது முன்பதிவு செய்துள்ளார்கள். அரசு அனுமதி 9 மணிக்கு வழங்கப்பட்டாலும் ஏற்கெனவே முன்பதிவு செய்த காட்சி நேரங்களை மாற்றுவதில் சிக்கல் இருக்கும். சில தியேட்டர்களில் மட்டும் 12 மணிக்கு மேல் முதல் காட்சிக்கான முன்பதிவு நடந்திருக்கிறது. அந்தத் தியேட்டர்களில் வேண்டுமானால் காலை 9 மணி காட்சிகள் நடைபெறலாம்.
பல தியேட்டர்களில் முதல் காட்சிக்கான டிக்கெட் விற்பனை 1000 ரூபாய் 1500 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் தகவல் வந்துள்ளது.




