பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்களுக்கு எதிராக ஹேமா கமிஷன் விசாரண நடத்தி வருவதை அடுத்து பல சீனியர் நடிகைகளும் இதுகுறித்து பேச தொடங்கி இருக்கிறார்கள். என்றாலும் ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் இது குறித்து கருத்து சொல்ல மறுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் இது குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறும் போது, மலையாள சினிமா மட்டுமின்றி அனைத்து மொழி சினிமாக்களிலும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து துணிச்சலாக பேசும் நடிகைகளுக்கு முக்கிய நடிகர்கள் மிரட்டல் விடுகிறார்கள். அதன் காரணமாக பலரும் இதை வெளியில் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்கள். மலையாள சினிமாவில் இந்த பாலியல் விவகாரத்தில் 10, 20 விக்கெட்டுகள்தான் விழும். ஆனால் தமிழில் பட்டியல் போட்டால் 500, 600 விக்கெட்டுகள் விழும்.
இங்கு நடிகைகள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கும் நிலையில் சினிமா சங்கங்கள் இல்லை. விஷால் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் சொல்வதற்கு முன்பே நான் அடித்து விட்டேன். ஆனால் அடித்தவர்களை நீங்கள் எப்படி சித்தரித்தீர்கள். அடி வாங்குனவர்களை நீங்கள் எங்கே போய் வைத்துள்ளீர்கள். அவர்களுடைய பதவியை பறித்தீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ள ரேகா நாயர், 2014ம் ஆண்டு ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு வந்த பல பெண்களையும் மேனேஜர்கள் அழைத்து சென்றார்கள். அதை அப்போதே நான் ஓப்பனாக கூறினேன். அது நடந்து பத்து வருஷம் ஆகிவிட்டது. ஆனால் அப்படி வெளிப்படையாக சொன்ன பிறகும் அப்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.




