பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
கடந்த சில வருடங்களாகவே மலையாள திரை உலகில் நடிகைகள் உள்ளிட்ட பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் புகார்கள் எழுந்தன. கடந்த 2017ல் இது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை கமிஷன் இவை எல்லாம் உண்மைதான் என்று தற்போது வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்பட கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களில் சில ஆண்களும் உடனடியாக இந்த அறிக்கையை வரவேற்று கருத்துக்களை கூறினார் ஆனால் முன்னணி நடிகர்களான மோகன்லால் மம்முட்டி திலீப் உள்ளிட்டோர் இது பற்றி அறிக்கை வெளியிட சில நாட்கள் வரை கருத்து எதுவும் கூறாமல் மவுனம் காத்து வந்தனர்.
மேலும் நடிகர் சங்க தலைவரான மோகன்லால் ஒரு தலைவராக இந்த அறிக்கை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமலேயே தனது பதவியில் இருந்து ராஜினாமாவும் செய்தார். அதேசமயம் மோகன்லாலின் மனைவி சுசித்ராவுக்கு ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அது தொடர்பாக அவருடன் மோகன்லால் சென்னையில் இருந்து சிகிச்சைக்கான பணிகளை கவனித்து வந்தார் என்பதால் இந்த ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து அவர் உடனடியாக பதில் எதுவும் கூறவில்லை என்றும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரும் மலையாள தொழிலாளர் சங்க தலைவருமான இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல தான் ராஜினாமா செய்வது குறித்து முன்கூட்டியே மோகன்லால் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ள இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன், மோகன்லால் உள்ளிட்டோர் பொறுப்புகளில் இருக்கும்போதே இது குறித்து பதில் அளித்து இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் தானும் எதிர்பார்த்ததாக கூறியுள்ளார்.