அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தெலுங்கு திரையுலகில் ஓரளவு பிரபலமான பாடலாசிரியர்களில் ஒருவரான குலசேகர் என்பவர் உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். இவர் கடந்த 2006ல் பாஸ்கர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான பொம்மரிலு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாடலாசிரியராக மாறினார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அதன் பிறகு இசையமைப்பாளர் ஆர்.பி பட்நாயக் (ஜெயம் பட இசையமைப்பாளர்) இசையில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதியுள்ள இவர் பாடல்களால் மட்டுமல்ல பரபரப்பான விஷயங்களாலும் இன்னும் பிரபலமானார்.
2018ல் காக்கிநாடாவில் உள்ள ஒரு தேவி கோவிலில் குலசேகர் திருடும்போது போலீசாரிடம் சிக்கி கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மொபைல் போன்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் என கைப்பற்றப்பட்டன. இவரது இந்த குற்றச்செயலைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினர் இவரிடமிருந்து விலகி விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.