ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தெலுங்கு திரையுலகில் ஓரளவு பிரபலமான பாடலாசிரியர்களில் ஒருவரான குலசேகர் என்பவர் உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். இவர் கடந்த 2006ல் பாஸ்கர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான பொம்மரிலு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாடலாசிரியராக மாறினார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அதன் பிறகு இசையமைப்பாளர் ஆர்.பி பட்நாயக் (ஜெயம் பட இசையமைப்பாளர்) இசையில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதியுள்ள இவர் பாடல்களால் மட்டுமல்ல பரபரப்பான விஷயங்களாலும் இன்னும் பிரபலமானார்.
2018ல் காக்கிநாடாவில் உள்ள ஒரு தேவி கோவிலில் குலசேகர் திருடும்போது போலீசாரிடம் சிக்கி கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மொபைல் போன்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் என கைப்பற்றப்பட்டன. இவரது இந்த குற்றச்செயலைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினர் இவரிடமிருந்து விலகி விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.