பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
இன்றைய தேதியில் மலையாள திரையுலகில் அதிக படங்களில் நடித்த வருவது யார் என்றால் சந்தேகமே இல்லாமல் அது நடிகர் மோகன்லால் தான் என சொல்லலாம். இந்த வருடத்தில் அவரது முதல் படமாக கடந்த ஜனவரியில் 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான அந்த திரைப்படம் தோல்வியையே தழுவியது. அந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் மோகன்லால் நடித்த வேறு எந்த படமும் ரிலீஸ் ஆகாதது அவரது ரசிகர்களுக்கு வருத்தமே. அதே சமயம் அவரது கைவசம் தான் அதிக படங்களும் இருக்கின்றன.
இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் குறிப்பாக அவர் முதன் முதலாக இயக்கியுள்ள 'பரோஸ்' திரைப்படம் முதற்கொண்டு வரிசையாக அவரது ஐந்து படங்கள் வெளியாகும் தேதிகள் தற்போது மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் முதல் ரிலீஸாக 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து மோகன்லால், ஷோபனா நடித்துள்ள 'தொடரும்' படம் ஜனவரி 30ம் தேதியும், பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' மார்ச் 27ம் தேதியும், சத்யன் அந்திகாடு டைரக்சனில் நடித்துவரும் 'ஹிருதயபூர்வம்' படம் ஆகஸ்ட் 28ம் தேதியும், தெலுங்கில் அவர் நடித்து வரும் 'விருஷபா' திரைப்படம் அக்டோபர் 16ம் தேதி வெளியாக இருக்கின்றன.