மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
விக்ரம் நடிப்பில் இந்தாண்டு அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ‛தங்கலான்' படம் வரவேற்பை பெறவில்லை. தற்போது அருண்குமார் இயக்கத்தில் 'வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இதையடுத்து மடோன் அஸ்வின், ராம்குமார் பாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் மகிழ்திருமேனி சமீபத்தில் விக்ரமை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார். இப்போது இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்கிறார்கள்.
அஜித்தை வைத்து நீண்டகாலமாக விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார் மகிழ்திருமேனி. இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் இன்னும் ஓரிரு விடுபட்ட காட்சிகள் மட்டும் படமாக உள்ளதாம். அதோடு தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடந்து வருகின்றன. இந்தப்படம் வெளியான பிறகு விக்ரம் படத்திற்கான பணிகளை அவர் மேற்கொள்ள உள்ளார்.