இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
விக்ரம் நடிப்பில் இந்தாண்டு அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ‛தங்கலான்' படம் வரவேற்பை பெறவில்லை. தற்போது அருண்குமார் இயக்கத்தில் 'வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இதையடுத்து மடோன் அஸ்வின், ராம்குமார் பாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் மகிழ்திருமேனி சமீபத்தில் விக்ரமை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார். இப்போது இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்கிறார்கள்.
அஜித்தை வைத்து நீண்டகாலமாக விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார் மகிழ்திருமேனி. இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் இன்னும் ஓரிரு விடுபட்ட காட்சிகள் மட்டும் படமாக உள்ளதாம். அதோடு தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடந்து வருகின்றன. இந்தப்படம் வெளியான பிறகு விக்ரம் படத்திற்கான பணிகளை அவர் மேற்கொள்ள உள்ளார்.