தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛பேபி'. விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் வேதரகொண்டா நாயகனாகவும், வைஷ்ணவி சைதன்யா நாயகியாகவும் நடித்தனர். சாய் ராஜேஷ் நீலம் இயக்கினார். சின்ன பட்ஜெட்டில் உருவாகி பெரிய லாபத்தை தந்தது. இதன் ரீ-மேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. தமிழ் உரிமையை ஞானவேல் ராஜா வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது ஹிந்தியில் இந்தப்படம் ரீ-மேக் ஆக உள்ளது. மறைந்த நடிகர் இர்பான் கானின் மகன் பாபில் கான் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஹிந்தியிலும் சாய் ராஜேஷே இயக்க உள்ளார். மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.