கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் |

பிரபல நட்சத்திர தம்பதியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை காவ்யா மாதவன் தம்பதி. சினிமாவில் ஜோடியாக நடித்த காலத்திலேயே இவர்கள் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஜோடியாக இருந்தார்கள். நடிகர் திலீப், நடிகை மஞ்சுவாரியரை திருமணம் செய்து மீனாட்சி என்கிற ஒரு மகள் இருந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்தார். அதேபோல காவ்யா மாதவனும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மிக குறுகிய காலத்திலேயே திருமண பந்தத்தை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இந்த நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தபோது இவர்களுக்குள் ஏற்கனவே அமுங்கி இருந்த காதல் மீண்டும் துளிர்விட்டு அடுத்த சில மாதங்களிலேயே இருவரும் திடீரென திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை சென்றது. இவர்களுக்கு மகாலட்சுமி என்கிற ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. திலீப்-மஞ்சு வாரியரின் மகளான மீனாட்சியும் இந்த தம்பதியுடன் தான் இப்போது வரை வசித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாக நடிகர் திலீப் ஒரு நடிகையின் கடத்தல் தொடர்பான வழக்கில் சிக்கி சிறை சென்றது, அப்படி ஒரு நிகழ்வு நடப்பதற்கும் திலீப் நடிகை மஞ்சு வாரியரை விட்டு பிரிவதற்கும் கூட காரணமாக காவ்யா மாதவன் விமர்சிக்கப்பட்டது, திலீப்பின் படங்கள் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது என ஒரு பக்கம் விமர்சனங்களையும் சரிவுகளையும் திலீப் சந்தித்தாலும் இந்த காதல் ஜோடி எட்டாம் வருட திருமண கொண்டாட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து காவியா மாதவன் தானும் கணவர் திலீப்பும் வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.